×

முதல்வரிடம் அமைச்சர் வாழ்த்து தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய நாளைக்குள் அளிக்கும் விண்ணப்பம் ஏற்கப்படும்

திருச்சி, டிச.2: திருச்சி சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கட்டுமானம், மைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டி தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் விஏஓவிடம் தொற்று காலமான மார்ச் 1ம் தேதி முதல் அக்.24ம் தேதி வரை சான்றுகள் பெற்று கைவசம் விண்ணப்பங்கள் பெற்றிருப்பின் அவற்றை திருச்சி செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து நாளைக்குள் (3ம் தேதி) அளிக்கும் விண்ணப்பங்கள் பதிவிற்கு ஏற்கப்படும். இதனை கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Labor Welfare Board ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...