×

சுக்காலியூர் ரவுண்டானாவில் நிழற்குடை அமைக்கப்படுமா?

கரூர், டிச. 2: சுக்காலியூர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் நவீன நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருச்சி பைபாஸ் சாலை, பிற பைபாஸ் சாலைகளுடன் இணையும் பகுதி சுக்காலியூர் ரவுண்டானா பகுதி. இந்த சந்திப்பு பகுதியின் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு பேரூந்துகள் சென்று வருகின்றன. மாவட்ட பகுதிகளுக்கும் இந்த பகுதியின் வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுக்காலியூர் அருகே நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அது தற்போது பயன்பாடின்றி சிதைந்த நிலையில் உள்ளதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே இந்த சந்திப்பு பகுதியில் பயணிகள் நலன் கருதி நவீன நிழற்குடை அமைத்து தர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Sukkaliyur Roundabout ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது