×

செயின் திருடிய 2 பேரை விரட்டி பிடித்த போலீசார்

கமுதி, டிச.2: விருதுநகர் மாவட்டம், கீளூரை சேர்ந்த கோமதி, பரளச்சி கிராமத்தில், பத்திரப்பதிவு சம்பந்தமாக இருசக்கர வாகனத்தில் சென்றார். கமுதி சாலையில் சென்றபோது, டூவீலரில் வந்த இரண்டு பேர் கோமதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். தகவலறிந்த பெருநாழி இன்ஸ்பெக்டர் லெட்சுமி 2 பேரையும் விரட்டி வந்துள்ளார். பின்னர் கமுதி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு பேரும் போலீசாரிடம் சிக்காமல், தப்பியோடும் போது, எட்டுக்கண் பாலம் அருகே, அவர்களை விரட்டி வந்த, கமுதி சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன், தனிப்பிரிவு காவலர் முருகபூபதி மற்றும் போலீசார் கார்த்திக் ஆகிய 3 பேரும் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட இரண்டு பேரும் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த சூர்யா(23), யுவஸ்ரீதர் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு