×

அதிமுகவில் 500 பேர் இணைப்பு

பரமக்குடி, டிச.2: பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னிலை வகித்தார். இதில் முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.காரைக்குடி, கொளுந்துரை, பிரபக்களூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும் - பெண்களும் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி காமன்கோட்டையைச் அனிதா முருகேசன், ஏற்பாட்டில் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களை மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் சால்வை அணிவித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் நாகநாதன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனி கட்டி, சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் அப்துல் மாலிக், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ