×

நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகை மீண்டும் வழங்க வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை

கீழக்கரை, டிச.2: தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்ட பதிவேடுகளை பராமரிக்கும் ஊராட்சி செயலாளர்களுக்கு, ரூ. ஆயிரம் மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்க தொகை வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஊக்கத் தொகையை மீண்டும் வழங்கிட ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருப்புல்லாணி ஊராட்சி செயலர்கள் சங்க தலைவர் ஜெயபால் கூறியதாவது, சிறப்பு ஊக்க தொகை2018ம் ஆண்டு முதல் தற்போது வரை ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Panchayat secretaries ,
× RELATED தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்...