×

இலவச வீட்டு மனை பட்டா கோரி உசிலம்பட்டி ஆர்டிஓ ஆபீஸ் முற்றுகை

உசிலம்பட்டி, டிச. 2:  எழுமலை அருகே மள்ளப்புரத்தில் அருந்ததியினர்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பல குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் என மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இலவச வீட்டுமனை கேட்டு நேற்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் அப்பகுதி பெண்கள் உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆர்டிஓ புகார் மனுவை பெற்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்பே பெண்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Usilampatti RTO ,office blockade ,
× RELATED 10 ஆண்டுகளாக அவதி சாலை பணி துவங்கா...