பெட்ரோல் பங்கில் அளவு குறைவு புகார் மதுரையில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

மதுரை, டிச. 2:  மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், ரூ.300 பெற்று கொண்டு, ரூ.225க்கு டூவீலருக்கு அளவு குறைத்து பெட்ரோல் வழங்கி மோசடி செய்ததாக நேற்று ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்பேரில் பெட்ரோல் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்கிற்கு 15 நாட்கள் விற்பனைக்கு தடை விதித்தனர். மேலும் அளவு குறைவு உள்ளிட்டவை குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: