29 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை சொக்கிகுளம் ராமமூர்த்தி ரோட்டில் தல்லாகுளம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று இருந்தவர்களை பிடித்து விசாரித்ததில், கஞ்சா வியாபாரிகள் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோடு சரவணன்(26), பிடிஆர் ரோடு சிவமணி(23), மகபூப்பாளையம் முத்துமணி(25), பிரதீப்(22), கரிமேடு அழகரடி 2வது தெரு சிவா(25), மீனாட்சிபுரம் விக்ரம் (எ) காக்கா மண்டையன் (18) ஆகியோரை கைது செய்து, 25 கிலோ கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், விளாங்குடி செங்கோல் நகர், பசுமலை, கீரைத்துரை என்எம்ஆர் பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா விற்ற பழைய விளாங்குடி பாண்டி(எ) ஐஸ்பாண்டி (69), பைகாரா செந்தில் (34), கீரைத்துரை கோதண்டராமன் மில் ரோடு சேர்ந்த விக்னேஷ்குமார் (32) ஆகியோரை கைது செய்து, 2 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.520 பறிமுதல் செய்யப்பட்டது. சிந்துபட்டி போலீசார் பி.மேட்டுபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது  அவ்வழியே வந்த டூவீலரை நிறுத்தி சோதனையிட்டதில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா  இருந்தது தெரிந்தது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, மதுரை செல்லூரை  சேர்ந்த பாண்டியை (42) கைது செய்தனர்.

Related Stories: