திருப்பூர், டிச.2: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் 44 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லி போராட்டத்தில் விவசாயிகளை தாக்கிய போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர், ரயில் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர்.அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில், போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.