×

விஷம் குடித்த தாய் சாவு: மகளுக்கு சிகிச்சை

கோவை, டிச.2: கோவை குனியமுத்தூர் வெத்தலைக்கார தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (52). தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி செல்வராணி (42). மகள் கீர்த்தி (16). இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். செல்வராணி  கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த செல்வராணி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு ெசய்தார். தனது மகள் கீர்த்தியிடம் இனியும் நோய் தொல்லையில் வாழ விரும்பவில்லை. செத்து போக போகிறேன் எனக்கூறினர். இதை கேட்டு கீர்த்தி கதறி அழுதார். உங்களை பிரிந்து நான் இருக்க மாட்டேன் எனக்கூறி கதறினார். இதைத்தொடர்ந்து தாயும், மகளும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். சந்திரசேகர் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் இருந்த இருவரும் சாணி பவுடர் வாங்கி வந்து கரைத்து குடித்தனர். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரசேகர் மனைவி, மகளும் மயக்க நிலையில் கிடப்பதை பார்த்து பதறினார். இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதில் செல்வராணி சிகிச்சை பலனின்றி இறந்தார். கீர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி