பண்பொழி பகுதிகளில் ரூ.26 லட்சத்தில் திட்ட பணிகள் முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

செங்கோட்டை, டிச.2: பண்பொழி பகுதிகளில் ரூ.26 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியபிள்ளைவலசையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன்கடை கட்டவும், தேன்பொத்தை மண்பாண்ட சொசைட்டிக்கு எதிரில் ரூ.4 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும், பண்பொழி அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தையும், திருமலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அனைத்து சமுதாய சுடுகாட்டிற்கு ரூ.9 லட்சத்தில் எரிமேடை, நன்மை கூடம், போர்வெல் மற்றும் மின்மோட்டார் தொட்டி அமைக்கவும் ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சிகளுக்கு முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் ராமையா என்ற துரை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஜபருல்லாகான், விஸ்வநாதபுரம் தமிழ்ச்செல்வி, டாக்டர் நவாஸ்கான், செய்யதலி, காமாட்சிநாதன், முகமதுஈஷா, காளியப்பன், மயில் சுப்பையா, முகமது அப்ரார், ரஹ்மத்துல்லாஹ், கண்ணன், முத்துசாமி, மணி, லட்சுமணன், வண்டிசெல்வம், செல்வகுமார், சுலைமான், கருப்பசாமி, அசன்கனி, மணி, மைதீன், காளிராஜ், குமார், கல்யாணி, குட்டி நடராஜன், ஐயப்பன், ராமர், தங்கையா, வரிசை முகமது, அலி, சுரேஷ், மாரியப்பன், பெரியாம்பிள்ளை இஸ்மாயில், திவான்ஒலி ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: