லோடு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

சுரண்டை, டிச. 2:கேரளாவுக்கு லோடு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன்அரிசியை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலசை பகுதியில் சேர்ந்தமரம் எஸ்.ஐ. தினேஷ்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மறித்து சோதனை நடத்தினர். இதில் 2 டன் ரேஷன்அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். ரேஷன்அரிசி சேர்ந்தமரம் பகுதியில் சேகரித்து கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.  இதையடுத்து லோடு ஆட்டோவுடன் 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடையாலுருட்டியைச் சேர்ந்த சுடலை மகன் மாடசாமி(35), முருகன் மகன் ராஜா(32) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: