ஆடு திருடிய இருவர்கள் கைது

வி.கே.புரம், டிச. 2: வி.கே.புரம் அருகே ஆடு திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.வி.கே.புரம் அருகே உள்ள கல்சுண்டு காலனியைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி வேலம்மாள்(55). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு திருட்டு போனது. இதுகுறித்து வேலம்மாள் விகேபுரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து எஸ்ஐ சிவதாணு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் மன்னார்கோவிலைச் சேர்ந்த முருகன் மகன் சக்திவேல்(21), கண்ணன் மகன் அருண்குமார்(21) ஆகியோர் ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்த ஆட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: