தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் டிச. 5,6ல் ஸ்டாலினின் குரல்’ பிரசார பயணக்கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, டிச. 2: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.ல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை :தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க தமிழகத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் பிரசார பயணம் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்  பிரசார பயணம் வரும் 5, 6 ஆகிய நாட்களில் நடக்கிறது. இதில் தேர்தல் பணிக்குழு மாநில இணைத்தலைவரான முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் சிறப்புரையாற்றுகிறார். டிச. 5ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாநகர இளைஞர் அணி ஏற்பாடு செய்துள்ள ரத்த தான முகாமை துவக்கி வைக்கும் அவர், ஆறுமுக நாடார் திருமண மண்டபத்தில் காலை 11 மணிக்கு தூத்துக்குடி தொகுதி நிர்வாகிகள், பொதுமக்களுடன்  கலந்துரையாடுகிறார். மாலை 5 மணிக்கு விளாத்திகுளம் தொகுதி, மந்திகுளம் ஊராட்சி, லெக்கம்பட்டி கிராம சமுதாய அரங்கில் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.

 மறுநாள் 6ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், காலை 10 மணிக்கு கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார். 10.30 மணிக்கு  கட்டாலங்குளம் கிராம மக்களுடன் கலந்துரையாடி விட்டு காலை 11 மணிக்கு கோவில்பட்டி- நெல்லை 4 வழிச்சாலையில் கட்டாலங்குளம் பிரிவு சாலை சந்திப்பில் வீரன் அழகு முத்துக்கோன் புதிய நுழைவு வாயிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நண்பகல் 12 மணிக்கு கயத்தாறில் உள்ள மகேஸ்வரி திருமண மண்டபத்தில் கிழக்கு ஒன்றிய  நிர்வாகிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 5 மணிக்கு கோவில்பட்டி மந்திதோப்பு கிருஷ்ணா மஹால்,மேற்கு ஒன்றிய கிராம மக்களுடனும், மாலை 6.30 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம், நாலாட்டின் புதூர் கோகுலம் திருமண மண்டபத்தில் கிராம மக்களுடனும் கலந்துரையாடுகிறார். எனவே, நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட பகுதி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: