தூத்துக்குடி, டிச. 2: ஆவின் சேர்மன் சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் ஆணையாளர் வள்ளலார் ஆலோசனையின் பேரிலும் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பால் விநியோகத்தில் ஏதேனும் இடையூறுகள் இருந்தால்அவற்றை சரிசெய்ய சிறப்புதொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம். அதன்படி, கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 9585229933, 9488994407 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.