×

காரைக்காலில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,723ஆக உயர்வு

காரைக்கால், டிச.2: காரைக்காலில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,723ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவது போல், காரைக்கால் மாவ ட்டத்திலும் கடந்த சில வாரங் களாக கொரோனா நோய் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. இதுவரை 46,680 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், காரைக்காலில் நேற்று வரை கொரோனா தொற்று 3,714ஆகவும், பலி எண்ணிக்கை 64ஆகவும் இருந்தது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த 30ம் தேதி 312 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில், மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,723ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3457 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 112 பேர் அரசு பொது மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...