×

ஆழியூர் பகுதியில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்

நாகை,டிச.2: நாகை அருகே ஆழியூர் பகுதியில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது.முகாமை நாகை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை மற்றும் மலடு பரிசோதனை நடந்தது.ஆண்மை நீக்கம் மற்றும் குடற்புழு நீக்கம் ஆகியவை நடந்தது. டாக்டர்கள் லாரன்ஸ், சுகந்தி, கால்நடை ஆய்வாளர்கள் பாரிவேந்தன், செந்தில், தனசேகரன், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

Tags : Animal Care Project Camp ,Azhiyur ,
× RELATED கீழ்வேளூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்