×

கலெக்டர் தகவல் வலங்கைமான் அருகே விஷமருந்தி வாலிபர் தற்கொலை

வலங்கைமான், டிசம்.2: வலங்கைமான் அருகே விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த விவசாய கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கொட்டையூர் சர்வ மானியம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜேஷ்(25). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. மது அருந்துவதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் வேதையடைந்த ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் இறந்தார். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு