×

செய்யாறு அருகே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

செய்யாறு, டிச.2: செய்யாறு அடுத்த பல்லி மேட்டு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(50), விவசாயி. இவரது மகள் குட்டிதர்ஷினி(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுமாம். இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி குட்டிதர்ஷினிக்கு மீண்டும் வலிப்பு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர், விஷம் குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு காவல் நிலைய எஸ்ஐ மணி வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : student ,suicide ,Seiyaru ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...