புதுவையில் புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு 45 வயது நபர் சிகிச்சை பலனின்றி பலி

புதுச்சேரி, டிச. 2: புதுச்சேரியில் நேற்று புதிதாக 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 3316 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 23, காரைக்கால்- 9, ஏனாம்- 2, மாகே- 19 என  மொத்தம் 53 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 45  வயது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  611 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 ஆகவும் உள்ளது.  புதுச்சேரி  மாநிலத்தில் இதுவரை 37020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் 145 பேர் சிகிச்சை பெறும் நிலையில்,  வீடுகளில் 294 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 439 பேர் சிகிச்சையில் உள்ளனர். 72 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்தோர் எண்ணிக்கை 35,970 (97.16 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  4,05,325 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 3,64,043 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தபட்டவர்களின் குடும்பத்தினருக்கும் கோவிட் பரிசோதனை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: