உளுந்தூர்பேட்டை, டிச. 2: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது. ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த 50 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ேநற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.