அம்பை டிச.1: கல்லிடைக்குறிச்சியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் கலந்துரையாடினார். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சியில் திமுகவின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதில் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏராளமான கைத்தறி நெசவாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், திண்டுக்கல் லியோனியுடன் கலந்துரையாடல் நடத்தி தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் அப்பாவு வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு நெசவாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.