×

முறப்பநாடு பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது

தூத்துக்குடி, டிச. 1: முறப்பநாடு பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  முறப்பநாடு பகுதியில் கடந்த 3ம் தேதி மணக்கரை பகுதியைச் சேர்ந்த தேவாரன்  மகன் பார்வதிநாதன் (22), நெல்லை சந்திப்பு சிஎன் கிராமத்தைச் சேர்ந்த  இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (28) ஆகியோர் பணம் கேட்டு, ஒருவரிடம் தகராறு செய்ததோடு அரிவாளால் தாக்க முயன்றனர். இதையடுத்து கொலை முயற்சி வழக்குப் பதிந்த முறப்பநாடு போலீசார், பார்வதிநாதனையும், இசக்கிராஜாவையும் கைதுசெய்தனர்.  இதனிடையே  பார்வதிநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய  எஸ்பி  ஜெயக்குமார் பரிந்துரைத்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ், இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து  முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பாளை மத்திய சிறையில் பார்வதிநாதனை  குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையை வழங்கினார்.

Tags : area ,Murappanadu ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...