×

லாரி உரிமையாளர் சங்கம் ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு

திருச்செங்கோடு, டிச.1:திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் பாரிகணேசன் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரனிடம் அளித்த கோரிக்கை  மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா மற்றும் டீசல் விலை உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை ரத்து செய்து, லாரித்தொழிலை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, துணை செயலாளர் மோகன், ரிக் சங்க செயலாளர் கொங்கு சேகர், துணை செயலாளர் ராஜபாண்டி ராஜவேலு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags : RTO ,Lorry Owners Association ,
× RELATED பள்ளி, கல்லூரி வாகனங்களில் கேமராக்கள்,...