மணப்பாறை, நவ.30: மணப்பாறை பகுதிகளில் அனுமதியின்றி அரசு மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி பிருந்தா உத்தரவின் பேரில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நொச்சிமேடு மற்றும் பைபாஸ் ரோடு பகுதிகளில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்றதாக இலுப்பூரை சேர்ந்த பெரியசாமி(32), செவலூரை சேர்ந்த பழனிச்சாமி(58) ஆகிய இருவரையும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.