×

ஆண்டிபட்டி அருகே மழை பெய்தால் குளமாகும் சாலை வாகன ஓட்டிகள் அவதி

ஆண்டிபட்டி, நவ. 30: ஆண்டிபட்டி அருகே, வடிகால் வசதியின்றி சாலையில் குளம்போல தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். ஆண்டிபட்டி அருகே, கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் மாயாண்டிபட்டி கிராமம் உள்ளது. இக்கிராம சாலை வழியாக தெப்பம்பட்டி, வேலப்பர்கோவில், சித்தார்பட்டி, பாலக்கோம்பை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகனப் போக்குவரத்து செல்கிறது. இந்நிலையில், கிராமத்தில் போதிய வடிகால் வசதியில்லாததால், சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். மேலும், மழைநீரில் கழிவுநீரும் தேங்குவதால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, மாயாண்டிபட்டி கிராமத்தில் மழைநீரை வெளியேற வடிகால் வசதி அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Roads ,Andipatti ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...