தஞ்சை, டிச. 1: தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்நடந்தது.கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் நீலமேகம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்கள் மற்றும் 2020 மின்சார ஆணையம் திருத்த சட்டம் இவற்றை உடனடியாக வாபஸ் பெறக்கோரி வட மாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லி காவல்துறையின் அடக்குமுறைகளையம் சமாளித்து விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.