வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மனு

கடலூர், டிச. 1: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே புதுநகரை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி விரோணிக்கால்(35). இவர் தனது குழந்தைகளுடன் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது கணவர் ராஜேஷ், ஓமன் நாட்டில் மஸ்கட் என்ற இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி விபத்தில் சிக்கிய அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 28ம் தேதி அவர் இறந்து விட்டதாக செல்போனில் எனக்கு தகவல் வந்தது. இதனால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories: