×

தமிழகத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும்: 2ம் நிலை காவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

வேலூர், டிச.1:தமிழகத்தில் வரும் 13ம் தேதி நடக்க உள்ள 2ம் நிலை காவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.அதன்படி ஆயுதப்படை 2ம் நிலைக் காவலர் பதவிக்கு 3,784 பணியிடங்களுக்கும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2ம் நிலைக் காவலர் பதவிக்கும் என மொத்தம் 6,545 பணியிடங்களுக்கும், சிறைத்துறையில் 2ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பணியிடங்கள் என மொத்தம் 10,906 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் வரும் 13ம் தேதி 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக நடக்க உள்ளது. அதற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் நேற்று முன்தினம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதை விண்ணப்பதாரர்கள் ‘www.tnusrbonilne.org’ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த எழுத்துத்தேர்வு 1.20 நிமிடங்கள் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத்தேர்வு நடக்க உள்ள தேர்வு மையங்களை தயார்ப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...