×

சிவன் கோயில்களில் சொக்கப்பனை ஏற்றம்

திருவள்ளூர்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நேற்று முன்தினம் இரவு சொக்கப்பனை ஏற்றபட்டது.திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கோயில் சன்னதிகளில் தீபம் ஏற்றபட்டது.

தொடர்ந்து உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். இரவு 7 மணியளவில் கோயில் முன் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை திரளான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதேபோல், காக்களூர் பூங்கா நகர் சிவ விஷ்ணு கோயில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை ஏற்றபட்டது.

Tags : Shiva ,temples ,
× RELATED க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு