×

திராட்சை சாகுபடி கருத்தரங்கம்

சின்னமனூர், நவ. 30: சின்னமனூரில் அருகே நடந்த திராட்சை சாகுபடி கருத்தரங்கத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென் டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய அளவிலான திராட்சை சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு புனே தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சோம்குவார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குனர் ஜவகர்லால், பெரியகுளம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆறுமுகம், கோகோ கோலா லிமிடெட் முனைவர் ஆதித்திய பண்டா முன்னிலை வசித்தனர். தேனி, நபார்டு வங்கி உதவி மேலாளர் புவனேஸ்வரி வரவேற்றார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திராட்சை விவசாயிகள் கலந்து கொண்டனர். சென்டெக்ட் ஆராய்ச்சி நிலைய முனைவர் பச்சைமால் நன்றி கூறினார்.

Tags : Grape Cultivation Seminar ,
× RELATED திராட்சை சாகுபடி கருத்தரங்கம்