×

பைக்கில் வந்த வாலிபர் குழியில் தவறி விழுந்து பலி

சூலூர், நவ.30: சூலூரில் பைக்கில் வந்த வாலிபர் மழையினால் ஏற்பட்ட குழியில் தவறி விழுந்து பலியானார். சூலூர் அருகே வி.கே.என். தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், இயந்திர உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் கெளதம் (26). தந்தை நடத்தும் கடையை மேற்பார்வை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று கௌதம் தனது பைக்கில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சூலூரில் இருந்து சோமனூர் சென்று கொண்டிருந்தார். ரயில்வே பீடர் ரோட்டில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது.அங்கு மழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

அந்த இடத்தில் கௌதம் வந்த போது பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர்  போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கௌதம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அருகில் இருந்த தனியார் கம்பெனி நிர்வாகத்தினர் அந்தக் குழியை மணல் போட்டு முடி சரி செய்தனர்.

Tags : pit ,
× RELATED ஸ்ரீ தேவிலோகமாத்தம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா