×

திருக்கார்த்திகை தீபதிருநாள் பெரியகோயிலில் சொக்கப்பனை உற்சவம்

தஞ்சை, நவ. 30: தஞ்சை பெரியகோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி, பெரியகோயில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில் நேற்று சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகமும், பின்னர் விபூதி அலங்காரமும் செய்யப்பட்டன.பின்னர், பெருவுடையார், பெரியநாயகி அம்மன் புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோயில் மராட்டா கோபுரம் முன் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல, தஞ்சையிலுள்ள பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல்முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags : festival ,Thirukarthikai Deepathirunal Periyakoil ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...