தஞ்சை,நவ.30: தஞ்சையில் சிறுநீர் கழிப்பதாக கூறிவிட்டு, தப்பியோடிய கைதியை, போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மேலமருதுார் கிராமத்தை சேரந்தவர் ராஜ்குமார் (51), இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு மணப்பாறை போலீசாரால், கைது செய்யப்பட்டு முசிறி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரிடமிருந்து 70 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், ஒரு வழக்கு தொடர்பாக ராஜ்குமாரை போலீசார், கடந்த 18ம்தேதி, நாகப்பட்டினம் முதலாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்திட்டு, அவரை மீண்டும் முசிறி சிறைக்கு அன்று இரவு பேருந்து மூலம் அழைத்து சென்றனர். தஞ்சை, புதிய பேருந்து நிலையத்தில் இரவு 8.45 மணியளவில் இறங்கி, திருச்சி பேருந்துக்கு மாறும் போது, போலீசாரிடம் சிறுநீர் கழிப்பதாக கூறி தப்பியோடிவிட்டார்.