×

வாடகை கார் பெற்று மோசடி

ஆலந்தூர்: கோட்டூர்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஆகாஷ் சிங் (26), இவரது நண்பர் கார்த்திக் ஆகியோரிடம் 3 கார்களை வாடகைக்கு பெற்று, போலி ஆவணங்கள் மூலம் விற்க முயன்ற கிண்டி லேபர் காலனியை சேர்ந்த அருண்குமாரை (32) போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்தபோது, கார் விற்பதாக கூறி, 26 பேரிடம் பண மோசடி செய்தவர் என்பது தெரிந்தது.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...