×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அடைக்கலாபுரத்தில் ஆதரவற்றோருக்கு உணவு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்

திருச்செந்தூர், நவ. 30: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அடைக்கலாபுரத்தில்  ஆதரவற்ற முதியோர் மற்றும் மாணவர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன்  எம்எல்ஏ, பிரியாணி வழங்கினார். திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் மாணவர்களுக்கு காயல்பட்டினம் நகர இளைஞர் அணி சார்பில் பிரியாணி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு இளைஞர் அணி நகரச் செயலாளர் கலீல் ரகுமான் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஆதரவற்றோருக்கு பிரியாணி வழங்கினார். இதில் புனித சூசை அறநிலைய இயக்குநர் இசிதோர், துணை இயக்குநர் சேவியர், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகர செயலாளர் முத்துமுகமது, நகர துணைச் செயலாளர்கள் லேண்ட் மம்மி, கதிரவன், மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோ, முகம்மதுஅலி, ஜின்னா, வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து கவுன்சிலர் கேடிசி முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Anita Radhakrishnan MLA ,Adaikalapuram ,birthday ,Stalin ,occasion ,Udayanithi ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி