×

மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

பரமத்தி வேலூர், நவ.30: பரமத்திவேலூர் அருகே நல்லூரில்,செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும்போது அருகிலுள்ள சித்தளந்தூர் மின் வாரிய அலுவலகத்திலிருந்து பணியாளர்களை வரவழைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு, சுமார் 10 மணியளவில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சித்தளந்தூர் மின் நிலைய அலுவலகத்தில் பணியாற்றி வரும் நல்லூர் காளியப்பனூரைச் சேர்ந்த காளியண்ணன்(45) என்பவர் பழுது நீக்குவதற்காக வந்துள்ளார்.

நள்ளிரவில் மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு