×

கொடிக்கம்பம் சாய்ப்பால் பரபரப்பு

சேந்தமங்கலம், நவ.30:சேந்தமங்கலம் அருகே பழைய பாளையத்தில் உள்ள அருந்தியர் தெருவில், ஆதித்தமிழர் பேரவை சார்பில், நேற்று முன்தினம் இரவு கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது. நேற்று காலை கொடிக்கம்பம் பிடுங்கி கீழே தள்ளப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எஸ்ஐ சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் இடையூறாக கொடிக்கம்பம் நடப்பட்டிருந்ததால் அதை பிடுங்கி போட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இரு தரப்பையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து, கொடிக்கம்பம் அதே இடத்தில் நடப்பட்டது.

Tags :
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்