×

ராஜபாளையம் அருகே டிராக்டர் மோதி பெண் பலி கணவருடன் டூவீலரில் சென்ற போது பரிதாபம்

ராஜபாளையம், நவ. 27: ராஜபாளையம் அருகே கணவருடன் டூவீலரில் சென்ற பெண் டிராக்டர் மோதி பலியானார்.ராஜபாளையம் அருகே வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் வேலு (61). இவரது மனைவி மல்லிகா (58). இருவரும் நேற்று டூவீலரில் திருவில்லிபுத்தூர் சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். புதுப்பட்டி விலக்கு அருகே வந்த போது பின்னால் வந்த டிராக்டர் டூவீலர் மீது மோதியதில் மல்லிகா கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா உயிரிழந்தார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : tractor collision ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...