×

ஊரணியில் மூழ்கி சிறுமி பலி

கமுதி, நவ.27:  கமுதி அருகே குளிக்க சென்ற சிறுமி ஊரணியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமுதி அருகே பெருநாழி டி.எம்.கோட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் சாந்தினி(7). இவர் அப்பகுதியில் உள்ள சின்ன ஊரணியில் உறவினர்களோடு குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக, ஊரணியில் மூழ்கி இறந்து விட்டாள். புகாரின் பேரில் பெருநாழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு