பழநி, நவ. 27: பழநியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டத்திற்கான அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட திட்ட செயல் அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் திட்ட செயலர் தங்கபாண்டி புத்தாக்க திட்டத்தின் செயல்பாடுகள், திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். இதில் வட்டார அணி தலைவர் சிவமணி, துைண வட்டாட்சியர் ராமசாமி, திறன்- பயிற்சி அலுவலர் கார்த்திக்குமார், மாவட்ட முதன்மை பயிற்சி மேலாளர் வனிதா மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தோட்டக்கலை, வேளாண்துறை அதிகாரிகள், தொண்டு நிறுவன அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.