திண்டிவனம், நவ. 27: விக்கிரவாண்டி அருகே பம்பையாற்று ஓடையில் குளித்த வாலிபர் மாயமானதால் தீயணைப்பு துறையினர் வாலிபரை தீவிரமாக தேடி
வருகின்றனர்.விழுப்புரம் தாலுகா வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் மணிவேல்(22), மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் பெய்த மழையினால் கிராமத்தின் அருகே உள்ள வி.மாத்தூர் பம்பையாற்று ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 10 மணியளவில் மணிவேல் தன் நண்பர்களோடு சென்று ஓடையில் இறங்கி குளித்துள்ளார்.