×

திருச்சி மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை நிறுத்தம்


திருச்சி, நவ.27: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் கோட்டம், 7வது வார்டுக்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு, மேல் புறத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட 600 எம்.எம் விட்டமுள்ள பம்பிங் மெயின் உள்ளது. இதன் மூலம் சஞ்சீவி நகர் விறகுபேட்டை, ஜெகநாதபுரம், உக்கடை மகாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம் மற்றும் கல்லுக்குழி ஆகிய 11 மேல்நிலை நிர்தேக்க தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பம்பிங் மெயினில் திருச்சி-தஞ்சை மெயின் ரோட்டில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. மேற்படி குழாய் நீர் கசிவை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் பயன்படும் பகுதிகளில் இன்றும், நாளை (28ம் தேதி) ஆகிய இரு நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது. இத்தகவலை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Tags : Trichy ,
× RELATED திருச்சியில் ஊஞ்சல் விளையாடிய சிறுவன் கழுத்தில் துண்டு இறுக்கி பலி