×

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணெய், சிலிண்டர்கள் பறிமுதல்

அறந்தாங்கி, நவ.27:அறந்தாங்கி நகரில் உள்ள ஒரு கடையில் வைத்திருந்த ரேசன் மண்ணெண்ணெய் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களை அறந்தாங்கி குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அதிகாரி தனி தாசில்தார் பறிமுதல் செய்தார்.
அறந்தாங்கி நகரில் அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள அரசு மண்ணெண்ணை வழங்கும் இடத்தின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கடையில் இருந்து அறந்தாங்கி குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஜெயாசித்ரகலா வுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அக்கடையில் ஆய்வு செய்தார். அப்போது அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட கூடிய மண்ணெண்ணெய் சுமார் 35 லிட்டரும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் இரண்டும் தாசில்தார் பறிமுதல் செய்தார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர்களை அறந்தாங்கி குடிமை பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர்கள் செந்தில், மதியழகன், கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...