×

புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, நவ.27: மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து புதுக்கோட்டையில் எல்ஐசி மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததோடு தங்கள் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கிளைத் தலைவர் லதாராணி தலைமை வகித்தார். இந்தியன் வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமதுரை தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் அருணாச்சலம், ராஜேந்திரன், ஆறுமுகம், மாணிக்கம் உள்ளிட்டோர் கோரிக்கை குறித்து பேசினர். இதில் சங்க உறுப்பினர்கள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : LIC ,Pudukkottai ,
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...