×

கறம்பக்குடி அருகே குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு

கறம்பக்குடி, நவ.27: கறம்பக்குடி அடுத்துள்ள ரெகுநாதபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக ரெகுநாதபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள புதுவிடுதி கிராமத்தை சேர்ந்த சாகுல் அமீது(52), சூரியமூர்த்தி(45) மற்றும் ரெகுநாதபுரம் அருகேயுள்ள தட்டாரமலைப்பட்டியை சேர்ந்த அப்துல் ரசாக்(40) ஆகிய 3 பேரும் தங்கள் கடைகளில் குட்கா பொருட்கள் விற்றதாக, அவர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களிடமிருந்து 30 பாக்கெட் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,Karambakudy ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...