சுகாதார பணிகளுக்கு 100 பணியாளர்கள் காணொலி காட்சி மூலம் 27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி, நவ.25: திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த வட்டாரங்களில் காணொலி காட்சி மூலம் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. நவம்பர் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண் இடுபொருட்கள், வேளாண் சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாய மக்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்துகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: