×

நிவர் புயலை எதிர்கொள்ள

நாகை, நவ.25: புயல் மற்றும் வெள்ள காலங்களில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்வாரியம் சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு நாட்களாக நாகை, நாகூர் பகுதிகளில் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் கம்பிகள் மீது உரச கூடிய நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியில் மின்கம்பியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புயலை எதிர்கொள்ள மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதனால் அவ்வப்போது மின்சாரம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றது.

Tags : Nivar ,storm ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...