×

மழைநீர் கசியும் விஏஓ அலுவலகம் ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்

உத்தமபாளையம், நவ. 25: உத்தமபாளையம் அருகே, விஏஓ அலுவலக மேற்கூரையில் மழைநீர் கசிவதால், ஊழியர்களும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். உத்தமபாளையம் அருகே, கோகிலாபுரம் கிராமம் உள்ளது. இங்கு விவசாயிகளும், கூலித்தொழிலாளர்களும் உள்ளனர். இங்குள்ள விஏஓ அலுவலகத்திற்கு, கிராம மக்கள் சான்றிதழ் வாங்கவும் பல்வேறு தேவைக்காகவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மழை காலங்களில் அலுவலகத்தில் மேற்கூரையில் நீர் கசிகிறது. இதனால், பணிபுரியும் விஏஓ மற்றும் உதவியாளர்கள் எப்போதும் அச்சத்துடன் பணிபுரிய வேண்டியுள்ளது. எனவே, கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி சேதுராமச்சந்திரன் கூறுகையில், ‘விஏஓ அலுவலகம் கட்டிடம் சிதிலமடைந்துள்ளது. சாதாரண மழைக்கே நீர் கசிகிறது. கனமழை காலங்களில் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கோ, இங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கோ பாதுகாப்பு இல்லை. எனவே, விஏஓ அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்’ என்றார்.

Tags : VAO ,office staff ,
× RELATED சாத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!