மதுரை, நவ. 25: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான நடவடிக்கை குறித்து கலெக்டர் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அருண்நிதி, சமூகஆர்வலர் கே.கே.ரமேஷ் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. நீர்நிலைகளும், நீர்வழி தடங்களும் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பாலும், தண்ணீரை தேக்க முடியாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகிறது. வண்டியூர் கண்மாய் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.